மே 1, தொழிலாளர் தினம்: டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடல்; விழுப்புரம் கலெக்டர் உத்தரவு

டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும் என நெறிமுறை வரையறுக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும் என நெறிமுறை வரையறுக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Collector Of Villupuram

மே தினம் , தொழிலாளர் தினத்தன்று  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் (அனைத்து FL1/FL2/FL3/FL3A/FL3AA and FL11) மூடப்பட வேண்டும்  என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

தமிழ்நாடு மதுபான சில்லறை வணிகம் விதிகள் (கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள்) 2003 உரிம விதிகள் மற்றும் அரசாணை ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ளவாறு மேற்கண்ட தினம் ட்ரை டே (DRY DAY) ஆக அனுசரித்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும் என நெறிமுறை வரையறுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 01.05.2025 ( வியாழக்கிழமை) 1 மே தினம் (May Day) அன்று, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் ஆகிய அனைத்தும் மூடப்பட வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டுள்ளார். எனவே, மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின்படி மே தினம் (May Day) 01.05.2025 (வியாழக்கிழமை) அன்று, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் இயங்காது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Tamilandu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: