விழுப்புரம் ரயில் நிலையத்தில் இட்லிக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த கேட்டரிங் நிறுவனத்துக்கு ரூ.30
ஆயிரம் அபராதம் விதித்து விழுப்புரம் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் வழுதரெட்டி முருகன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஆரோக்கியசாமி. அனைத்து நுகர்வோர்
பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொது நலச்சங்கத்தின் மாநில தலைவரான இவர் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் மதுரையில் இருந்து விழுப்புரத்துக்கு பயணம் செய்தார்.
இந்த ரயில் திருச்சி ரெயில் நிலையத்திற்கு வந்த போது முதல் நடைமேடையில் ரெயில்வே அனுமதி பெற்று உணவுப் பொருள் தயாரித்து விற்பனை செய்த கேட்டரிங் நிறுவன நுகர்வோர் சங்க நிர்வாகி விழுப்புரம் வழுதரெட்டி முருகன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஆரோக்கியசாமி.
அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொது நலச்சங்கத்தின் மாநில தலைவரான இவர் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் மதுரையில் இருந்து விழுப்புரத்துக்கு பயணம் செய்தார். இந்த ரெயில் திருச்சி ரெயில் நிலையத்திற்கு வந்தபோது முதல் நடை மேடையில் ரெயில்வே அனுமதி பெற்று உணவுப்பொருள் தயாரித்து விற்பனை செய்த கேட்டரிங் நிறுவனம் மீது புகார் கொடுத்தார்.
திருச்சி தொடர்ந்து, கோட்ட மேலாளர், கேட்டரிங் நிறுவன உரிமையாளருக்கும் கூடுதலாக வசூலித்த
ரூ.8-ஐ திருப்பி வழங்கக்கோரி புகார் மனு அனுப்பினார். இது குறித்து விழுப்புரம் நுகர்வோர் கோர்ட்டில் வக்கீல் கிஷோர்குமார் மூலம் புகார் செய்தார். இவ்வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் விசாரிக்கப்பட்டது.
இந்து வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில், ஆரோக்கியசாமியிடம் இருந்து கூடுதலாக பெற்ற 8 ரூபாயால் மன உளைச்சலுக்கு ஆளாகிய புகார்தாரர் ஆரோக்கியசாமிக்கு ரூ.20 ஆயிரம் நஷ்ட ஈடாகவும், வழக்கு செலவுக்காக ரூ.10 ஆயிரமும் கூடுதலாக பெற்ற தொகை ரூ.8-யும் சம்பந்தப்பட்ட கேட்டரிங் நிறுவனம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.