விழுப்புரத்தில் இருந்து திருப்பதி செல்லும் ரயில் போக்குவரத்து இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது
ஜூலை 24 முதல் திருப்பதி செல்லும் ரயில் சேவையில் மாற்றம். காட்பாடி, விழுப்புரத்திலிருந்து திருப்பதி செல்லும் ரயில் சேவை பராமரிப்பு பணி காரணமாக ஜூலை 24 முதல் 30-ஆம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: திருப்பதியிலிருந்து காட்பாடிக்கு தினமும் காலை 10.55 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில் (வண்டி எண் 07581) இயக்கப்படுகிறது.
மறுமாா்க்கமாக காட்பாடியிலிருந்து திருப்பதிக்கு தினமும் பிற்பகல் 3 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில் (வண்டி எண் 07660) இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஜூலை 24 முதல் 30 ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
விழுப்புரத்திலிருந்து திருப்பதிக்கு தினமும் காலை 5.30 மணிக்கு புறப்படும் இன்டா்சிட்டி விரைவு ரயில் (வண்டி எண் 06584) ஜூலை 24 முதல் 30 -ஆம் தேதி வரை காட்பாடியுடன் நிறுத்தப்படும்.
மறுமாா்க்கமாக இந்த ரயில் (வண்டி எண் 06853) திருப்பதியிலிருந்து புறப்படுவதற்கு பதிலாக காட்பாடியிலிருந்து மாலை 4.40 மணிக்கு புறப்பட்டு வழக்கம் போல் விழுப்புரம் சென்றடையும். இவ்வாறு செய்தி குறித்து தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“