/tamil-ie/media/media_files/uploads/2023/04/trains-1.jpg)
விநாயகர் சதுர்த்தி பண்டிகை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து - கோவைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து - கோவைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே புதன்கிழமை (செப்டம்பர் 4) அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை சென்ட்ரல் - கோவை சிறப்பு ரயில் (06151) நாளை மறுநாள் (செப்டம்பர் 6, வெள்ளிக்கிழமை) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு திருவள்ளுவர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இரவு 8.28 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 8.30 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக 11.45 மணிக்கு கோவை சென்றடையும்.
இதேபோல் மறுமார்க்கத்தில் கோவை - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06152) செப்டம்பர் 8-ம் தேதி கோவையில் இருந்து 11.30 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக இரவு 1.47 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 1.50 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளுவர் வழியாக மறுநாள் காலை 7.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்” என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.