இந்தியா முழுவதும் நாளை விநாயகர் சதூர்த்தி கொண்டாடப்பட உள்ளது. வீடுகளிலும் தெருவிலும் வைத்து விநாயகரை வழிபடுவது வழக்கம். சென்னையில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு, பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. விநாயகர் சிலையை வீடுகளுக்கு பலரும் வாங்கிச் சென்றனர். சென்னையில் மக்கள் கூடும் இடங்களில் புதிது புதிதாக விநாயகர் சிலை விற்பனை நிலையங்கள் உருவாகியுள்ளன. சென்னையில் விநாயகர் சில விற்பனை அமோகமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.