/indian-express-tamil/media/media_files/P1wqPWFvcBYJxF2egzP1.jpg)
விருதுநகர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் உள்ள பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து; 9 பேர் மரணம் (புகைப்படம்: ANI)
விருதுநகர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ரெங்காபாளையம் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்த நிலையில், காயம் அடைந்த 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் சிறிது நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், தகவல் அறிந்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி ஆகியோரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இதேபோல் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கிச்சநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று நண்பகல் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார். வெடி தயாரிக்கும்போது உராய்வு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், விருதுநகர் மாவட்டம் ரெங்கபாளையத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளார்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.