சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து; உயிரிழந்தவர்களுக்கு நிதியுதவி - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

virudhunagar district Sattur firecracker accident; 2 killed 7 severely injured Tamil News: சாத்தூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு, தலா 1 லட்சம் ரூபாயும் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

virudhunagar district Sattur firecracker accident; 2 killed 7 severely injured Tamil News: சாத்தூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு, தலா 1 லட்சம் ரூபாயும் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
virudhunagar Tamil News: Sattur firecracker accident, 2 killed 7 severely injured

Sattur firecracker accident Tamil News: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள மஞ்சள் ஓடைபட்டி எனும் கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், அதற்கான மருந்து தயாரிப்பின் போது உராய்வின் காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மருந்து தயார் செய்ய பயன்படுத்தப்பட்ட கட்டிடம் தரைமட்டமாகியுள்ளது.

Advertisment

மேலும், இந்த வெடி விபத்தில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. படுகாயம் அடைந்துள்ள 7 தொழிலாளர்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

publive-image
மாதிரி புகைப்படம்

இந்நிலையில், கோவில்பட்டியில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 7 தொழிலாளர்களில் அய்யம்மாள், சரஸ்வதி இருவரும் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisment
Advertisements

இந்த வெடி விபத்து குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து போலீசார் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

publive-image

இந்நிலையில், தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Virudhunagar Fireworks Factory Sivakasi Fire Acctdent Tamilnadu Latest News Fire Accident Tamilnadu News Update Tamilnadu News Latest Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: