விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பணி முடிந்து இரவு வீட்டிற்கு சென்ற நபரை நாய் துரத்தியதால் ஓடியபோது தரைமட்ட கிணற்றில் தவறி விழுந்ததில் அந்நபர் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டார்.
பாலையம்பட்டி பகுதியை சேர்ந்த தேவகுமார ராஜா அதே பகுதியில் கூலி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் வழக்கம்போல பணி முடிந்து நேற்று இரவு வீடு திரும்பியபோது சாலையில் சுற்றித் திரிந்த நாய்கள் துரத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நாய்களிடம் இருந்து தப்பிக்க முயன்று ஓடிய தேவகுமார ராஜா அந்த பகுதியில் தரை மட்டத்தில் இருந்த 100 அடி ஆழ கிணறு ஒன்றில் தவறி விழுந்துள்ளார்.
நீண்ட நேரம் அவர் கூச்சலிடவே அவரது கூக்குரல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பாகவே, பெரிய ஏணி ஒன்றை பயன்படுத்தி கிணற்றுக்குள் தவறி விழுந்த நபரை அப்பகுதி மக்கள் பத்திரமாக மீட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“