VK Sasikala News Live, VK Sasikala Tamil Nadu Arrival:தொடர்ந்து 23 மணி நேரம் பயணமாக நேற்று காலை தனது பயணத்தை தொடர்ந்த சசிகலா இன்று அதிகாலை 4 மணிக்கு சென்னை தி நகர் வீட்டை வந்தடைந்தார்.
சசிகலா வருகையை தமிழகத்தின் மொத்த அரசியல் வட்டாரமும் உற்றுக் கவனிக்கிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை முடிந்து திரும்பும் சசிகலா, அரசியல் ரீதியாக உருவாக்கும் தாக்கமே இதற்கு காரணம்.
2017 பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்ற சசிகலா, 2021 ஜனவரி 27 அன்று விடுதலை செய்யப்பட்டார். கொரோனா பாதிப்பு சிகிச்சை, பெங்களூரு ரிசார்ட்டில் தனிமைப்படுத்தல் ஆகியவற்றை முடித்துக்கொண்டு இன்று (பிப்ரவரி 8) தமிழகம் திரும்புகிறார்.
சசிகலா சென்னை வந்தால் நேரடியாக செல்ல விரும்புகிற இடம் ஜெயலலிதா நினைவிடம்தான். ஆனால் அங்கு பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதாகக் கூறி, பூட்டி வைத்திருக்கிறது அரசு. ஜெயலலிதாவுடன் சசிகலா வசித்த போயஸ் கார்டன் இல்லமும் அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டது. இவை தவிர, அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தினால் நடவடிக்கை கோரி மூத்த அமைச்சர்கள் டிஜிபி திரிபாதியிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். அதிமுக தரப்பின் இது போன்ற நடவடிக்கைகள் சசிகலா வருகையை இன்னும் அதிக முக்கியத்துவம் உரியதாக மாற்றியிருக்கின்றன.
“ஒரே அணியாக செயல்படுவோம்” – சசிகலா#Sasikala | #AMMK | #AIADMK | #sasikalareturns pic.twitter.com/TKdhAA5o0L
— Thanthi TV (@ThanthiTV) February 8, 2021
சசிகலா தமிழகம் வருகை, சசிகலாவுக்கு வரவேற்பு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் ‘லைவ்’வாக இந்தத் தளத்தில் காணலாம்.
Live Blog
VK Sasikala Tamil Nadu Arrival News : சசிகலா தமிழகம் வருகை, சசிகலாவுக்கு வரவேற்பு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் ‘லைவ்’வாக இந்தத் தளத்தில் காணலாம்.
சசிகலா பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வெளியே வரும்போது அதிமுக கொடி கட்டிய காரில் வந்தார். அதேபோல தமிழகத்திற்கும் அதிமுக கொடியுடன் வந்தால், போலீஸ் தரப்பு தடுக்குமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இதனால் சசிகலா வருகை சட்டம் ஒழுங்கு சார்ந்த பிரச்னையாகவும் பார்க்கப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டக் கழக துணைச் செயலாளர் D. தட்சணாமூர்த்தி உட்பட 7 பேர் அதிமுக கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவதாக அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
அரசு,பதவி,அதிகாரம்,காவல்துறை அனைத்தும் கைவசம் இருந்தும் சொந்த கட்சி அலுவலகத்தை கூட மூடி வைக்கவேண்டிய அவலம் எடப்பாடி பழனிசாமி தவிர வேறு எந்த முதல்வருக்கும் ஏற்பட்டிருக்காது. நெடுஞ்சாண்கிடையாக காலில் விழுந்து பெற்ற பதவியின் வலிமை அவ்வளவுதான் என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி விமர்சனம் செய்துள்ளளர்.
பள்ளிக்கொண்ட டோல்கேட்டை தற்போது கடந்துள்ள சசிகலா, இரவு 9 மணி வாக்கில் இராமாபுரம் எம்.ஜி.ஆர் தோட்டத்திற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுகவின் பொது எதிரி ஆட்சி கட்டிலில் அமராமல் தடுக்க, ஒரே அணியாக செயல்படுவோம் என்று சசிகலா தெரிவித்தார்.
சசிகலா: “ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது ஏன் என்பது மக்களுக்ககுத் தெரியும்” என்று கூறினார்.
சசிகலா: “அன்புக்கு நான் அடிமை; தமிழக மக்களுக்கும், தொண்டர்களுக்கும் நான் அடிமை; அடக்குமுறைக்கு அடிபணியமாட்டேன்” என்று பேசியுள்ளார்.
கட்சியைக் கைப்பற்றுவீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சசிகலா, “மிக விரைவில் எல்லோரையும் சந்திக்கிறேன், அப்போது சொல்கிறேன்” என்று தெரிவித்தார்.
பெங்களூருவில் இருந்து சென்னை வருகிற சசிகலாவுக்கு கிருஷ்ணகிரி மாவட்டம், கத்திகுப்பம் பகுதியில் அமமுகவினர் பொக்லைன் இயந்திரம் மூலம் 500 கிலோ ஆப்பிள் மாலையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பெங்களூருவில் இருந்து சென்னை வருகிற சசிகலாவுக்கு கிருஷ்ணகிரி மாவட்டம், கத்திகுப்பம் பகுதியில் அமமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி வந்த சசிகலாவுக்கு அமமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சசிகலா வரும் வழிகளில் எல்லாம் கட்சியினரை வரவேற்பை ஏற்றுக்கொண்டு இன்று இரவு சென்னை வருகிறார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான சொத்துகள் அரசுடைமையாக்கி தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அமைச்சர் ஜெயக்குமார்: “அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தியது தொடர்பாக காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்கும்; அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமை இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பி வரும் விகே சசிகலாவுக்கு ஓசூர் அருகே ஜல்லிக்கட்டு காளையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஒசூர் மோரணப்பள்ளி பிரத்யேங்கரா தேவி கோயிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார்
சசிகலா வருகைக்காக கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே பட்டாசு வெடித்தபோது இரண்டு கார்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளது.
சென்னை திரும்பும் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த போலீசார் தரப்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தடையையும் மீறி அதிமுக கொடியை பயன்படுத்தியதால், கிருஷ்ணகிரி காவல்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், காவல்துறையின் நோட்டீஸ் எங்களை கட்டுப்படுத்தாது என்று சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ஒசூர் சிப்காட் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் சசிகலா சாமி தரிசனம். அதிமுக வண்ண துண்டை ஏந்தியப்படி சசிகலா சாமி தரிசனம் செய்தார்.
தடையை மீறி காரில் அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலாவுக்கு கிருஷ்ணகிரி போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக எல்லையான ஒசூர் ஜூஜூவாடி அருகே சசிகலா வந்து கொண்டிருந்த காரில் இருந்து ; வேறு காருக்கு மாறினார்.
ஜூஜூவாடியில் சசிகலாவை வரவேற்பதற்கு அவரது ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர்.அதிமுக கொடியை காரில் இருந்து அகற்றுமாறு சசிகலாவிடம் போலீசார் நோட்டீஸ் வழங்க உள்ளனர்.
சசிகலா தமிழக எல்லையான ஓசூரை வந்தடைந்ததும் கொடியை அகற்ற அவகாசம் தரப்படும், அதன் பின்பும் அகற்றாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்திப்பள்ளியை கடந்த சசிகலா வாகனம் . சசிகலாவுக்கு வழி எங்கும், பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது.
பெங்களூரில் இருந்து அதிமுக கொடியுடன் சசிகலா பயணம் மேற்கொண்டு வருகிறார். 100க்கும் மேல் கார்கள் சசிகலா காரை பின்தொடர்கின்றன.
பெங்களூருவில் இருந்து சசிகலா தமிழகம் புறப்பட்ட நிலையில் ,சென்னை நெடுஞ்சாலையில் சசிகலாவை வரவேற்க அதிமுக கொடியுடன் ஆதரவாளர்கள் காத்திருக்கின்றனர்.
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சசிகலா தமிழகம் புறப்பட்ட நிலையில் காவல்துறையின் முழு கட்டுப்பாட்டில் அதிமுக தலைமை அலுவலகம் உள்ளது.
பெங்களூருவில் இருந்து தமிழகம் புறப்பட்ட சசிகலாவிற்கு தொண்டர்கள் ஆரத்தி எடுத்தனர். சசிகலாவின் காரில் மீண்டும் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என காவல்துறை அறிவுறுத்திய நிலையில் காரில் மீண்டும் அதிமுக கொடி
அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக்கூடாது எனவும், அவரது வாகனத்தை 5 வாகனங்களுக்கு மேல் பின் தொடரக் கூடாது எனவும் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பாக அந்த மாவட்ட அமமுக செயலாளருக்கு நோட்டிஸ் வழங்கப்பட்டிருக்கிறது. இதை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருக்கிறது போலீஸ்.
சசிகலாவை வரவேற்று அவர் வரும் பாதை முழுக்க அமமுக-வினர் பேனர்கள் கட்டியிருக்கிறார்கள். கிருஷ்ணகிரி பகுதியில் காரில் வந்த மர்ம நபர்கள் அந்த பேனர்களை கத்தியால் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பேனர்களை கிழித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதி கூறினர்.
பெங்களூரு புறநகர்ப் பகுதியான தேவனஹள்ளி பகுதியில் உள்ள ரிசார்ட்டில் சசிகலா கடந்த சில நாட்களாக தங்கினார். இன்று மாலை சென்னை வந்து சேரும் அவருக்கு தி.நகர் ஹபிபுல்லா சாலையில் இல்லம் தயார் செய்யப்பட்டிருக்கிறது.
சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா இல்லம் அருகில் சசிகலாவுக்கு பங்களா கட்டும் பணி நடைபெறுகிறது. அது தொடர்பான வருமான வரித்துறை விசாரணை நடவடிக்கைகள் இருப்பதாலும், பணிகள் முழுமையாக நிறைவு பெறாததாலும் சசிகலா அங்கு தங்கவில்லை என கூறப்படுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை மற்றும் கொரோனா சிகிச்சை முடிந்து இன்று தமிழகம் வருகிறார் சசிகலா. பெங்களூருவில் இருந்து இன்னும் சற்று நேரத்தில் காரில் சென்னை புறப்படுகிறார்.
காலை 9 மணிக்கு மேல் எமகண்டம் என்பதால், அதற்கு முன்பாக சசிகலா தமிழக எல்லையை அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வழிநெடுகிலும் அவரை வரவேற்க டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக ஏற்பாடுகளை செய்திருக்கிறது.