Advertisment

நாளை வாக்கெடுப்பு; காரில் புறப்பட்ட கவுன்சிலர்கள்: தப்புவாரா திமுக மேயர்?

பாளையங்கோட்டை எம்எல்ஏ தலைமையில் ஒரு கவுன்சிலர் குழுவினர் புறப்பட்டனர்; மற்றொரு கவுன்சிலர் குழுவினர் நெல்லை மாவட்ட செயலாளர் டிபிஎம் மைதீன்கான் தலைமையில் புறப்பட்டனர்.

author-image
WebDesk
New Update
Voting on no-confidence motion against Tirunelveli DMK Mayor Saravanan tomorrow

நெல்லை மேயர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது நாளை வாக்கெடுப்பு நடக்கிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

tirunelveli | dmk | 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி மேயர் சரவணன் மீது நம்பிக்கை இல்லை என 38 உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர். மேலும், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவிற்கு கடிதம் அனுப்பினர்.

இந்த நிலையில்,  நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நாளை (ஜன. 12) நடத்தப்படும் என மாநகராட்சி ஆணையாளர் அனைத்து உறுப்பினர்களுக்கும் தனித்தனியே கடந்த டிச. 27-ம் தேதி கடிதம் அனுப்பினார்.

Advertisment

இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு  தங்கம் தென்னரசு கடந்த 2 தினங்களுக்கு முன்பு மாமன்ற உறுப்பினர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

எனினும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள 30 கவுன்சிலர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதனால்,  திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் மாமன்ற உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து அவர்கள் வெவ்வேறு வாகனங்களில் விருதுநகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதன்படி, பாளையங்கோட்டை எம்எல்ஏ தலைமையில் ஒரு கவுன்சிலர் குழுவினர் புறப்பட்டனர்.

நெல்லை மாவட்ட செயலாளர் டிபிஎம் மைதீன்கான் தலைமையில் மற்றொரு கவுன்சிலர் குழுவினர் புறப்பட்டனர். இதற்கிடையில், நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கவுன்சிலர்கள் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Dmk Tirunelveli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment