கடலூர் சிப்காட் ஆலையில் சுவர் இடிந்து 2 பெண்கள் பலி; நிவாரணம் கோரும் இந்திய குடியரசு கட்சி

கடலூர் சிப்காட் பகுதியில் இயங்கி வரும் 'இந்தியன் பாஸ்பேட்' என்ற ரசாயன ஆலையில் சுவர் விழுந்து விபத்தில் கட்டுமான 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் எஸ்.பி. ஜெயக்குமார் நேரில் விசாரணை நடத்தினார்.

கடலூர் சிப்காட் பகுதியில் இயங்கி வரும் 'இந்தியன் பாஸ்பேட்' என்ற ரசாயன ஆலையில் சுவர் விழுந்து விபத்தில் கட்டுமான 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் எஸ்.பி. ஜெயக்குமார் நேரில் விசாரணை நடத்தினார்.

author-image
WebDesk
New Update
Cuddalore chipcot accident

கடலூர் சிப்காட் ஆலையில் சுவர் இடிந்து 2 பெண்கள் பலி; நிவாரணம் கோரும் இந்திய குடியரசு கட்சி

கடலூர் மாவட்டம் சிப்காட் பகுதியில் உள்ள இந்தியன் பாஸ்பேட் ரசாயன தொழிற்சாலையில், கட்டுமானப் பணியின்போது சுவர் இடிந்து விழுந்த விபத்தில், இளமதி மற்றும் இந்திரா என்ற 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கு இந்திய குடியரசுக் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி வழங்கக் கோரியுள்ளது.

Advertisment

இந்த விபத்து தொடர்பாகக் கருத்து தெரிவித்த இந்திய குடியரசுக் கட்சி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் ரூ.20 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மேலும், அக்குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அவரது கல்வித் தகுதிக்கேற்ப தொழிற்சாலையிலேயே நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், தொழிற்சாலையைக் கண்டித்து இந்திய குடியரசுக் கட்சி சார்பில் கண்டனப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அக்கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, ரசான தொழிற்சாலை சுவர் இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் பலியான இடத்தில் எஸ்.பி. ஜெயக்குமார் நேரில் விசாரணை நடத்தினார். திறப்பு விழா கண்ட 2 மாதங்களுக்குள் சுவர் இடிந்த நிலையில், வட மாநிலத்தவர்கள் கட்டிட பணி செய்ததாக கூறப்படுகிறது.

Cuddalore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: