7 மாதங்களுக்கு பிறகு தமிழகம் திரும்பிய சத்குருவிற்கு உற்சாக வரவேற்பு

அமெரிக்காவில் இருந்து தமிழகம் திரும்பிய சத்குருவிற்கு, கோவை விமான நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

அமெரிக்காவில் இருந்து தமிழகம் திரும்பிய சத்குருவிற்கு, கோவை விமான நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

author-image
WebDesk
New Update
Sathguru

அமெரிக்காவில் இருக்கும் ஈஷா யோகா மையத்திற்கு கடந்த மே மாதம் சென்ற சத்குரு, 7 மாதங்களுக்குப் பிறகு இன்று தமிழகம் திரும்பினார். அவரை வரவேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கோவையில் குவிந்தனர். 

Advertisment

சத்குரு மாலை 6 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனர். இதைத் தொடர்ந்து, கோவை விமான நிலையத்தில இருந்து ஈஷா யோக மையம் வரை பல்வேறு இடங்களில் மக்கள் திரளாக அணிவகுத்து நின்று மலர்களை தூவியும், விளக்குகளை ஏந்தியும், மேள தாளத்துடன் சத்குருவை வரவேற்றனர். குறிப்பாக அவிநாசி சாலையில் உள்ள நாகர்கோவில் ஆர்ய பவன் உணவகத்தில் திரண்டு இருந்த மக்கள் அவரை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். 

Sathguru

ரேஸ் கோர்ஸ் சாலையில் வள்ளி கும்மி நடனத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காளம்பாளையம், மாதம்பட்டி, ஆலாந்துறை, இருட்டுப்பள்ளம், செம்மேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ளூர் கிராம மக்கள் சத்குருவிற்கு பிரம்மாண்ட வரவேற்பினை வழங்கினர். 

Advertisment
Advertisements

Sathguru

மேலும், ஆதியோகியில் 10,000-க்கும் அதிகமானோர் திரண்டு இருந்தனர். அவர்கள் சத்குருவை வரவேற்கும் விதமாக 1,00,008 அகல் விளக்குகளை ஏற்றி இருந்தனர். ஈஷா தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரமவாசிகள் பாரம்பரிய இசை மற்றும் நடனங்களுடன் சத்குருவை வரவேற்றனர். இதைத் தொடர்ந்து, மக்கள் முன்பு சத்குரு உரையாற்றினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: