Advertisment

மு.க.அழகிரி மகளுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்: வருமான வரித்துறை வழக்கில் அதிரடி

இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி மலர்மதி முன் விசாரணைக்கு வந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today in tamil,

Tamil Nadu news today in tamil,

அழகிரியின் மகள் அஞ்சுக செல்வி : முறையாக வருமான வரி கணக்கு செலுத்தாத வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகள் அஞ்சுக செல்விக்கு எதிராக ஜாமினில் வெளி வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது  சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேத்தியும், மு.க.அழகிரியின் மகளுமான அஞ்சுகச் செல்வி அழகிரி ஆறு ஆண்டுகளாக சுமார்  50 லட்சம் ரூபாய் வரை முறையாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என கூறி அவருக்கு எதிராக வருமான வரி துறை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு  ஏப்ரல் மாதம் தொடரப்பட்ட இந்த வழக்கில் அஞ்சுகச் செல்வி தொடர்ந்து அஜராகாமல் இருந்து வந்த நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி மலர்மதி முன் விசாரணைக்கு வந்தது.

தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் அஞ்சுகச் செல்வி நேற்றும் ஆஜராகாததையடுத்து, அவருக்கு எதிராக ஜாமினில் வெளி வர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து நீதிபதி மலர்மதி உத்தரவிட்டார்.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment