வந்தது தண்ணீர் ரயில் ; நீங்குமா சென்னையின் தண்ணீர் தட்டுப்பாடு

water scarcity : நான்கு சுற்றுகள் அடிப்படையில், 1 கோடி லிட்டர் நீர் கொண்டு வரப்படும். அங்கிருந்து, குழாய் வழியாக, கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு, நீர் கொண்டு செல்லப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு வினியோகிக்கப்படும்

water scarcity : நான்கு சுற்றுகள் அடிப்படையில், 1 கோடி லிட்டர் நீர் கொண்டு வரப்படும். அங்கிருந்து, குழாய் வழியாக, கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு, நீர் கொண்டு செல்லப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு வினியோகிக்கப்படும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai, water, jolatrpet, train, tanker, water scarcity, vellore, சென்னை, தண்ணீர், ஜோலார்பேட்டை, ரயில், டேங்கர், தண்ணீர் பற்றாக்குறை, வேலூர்

chennai, water, jolatrpet, train, tanker, water scarcity, vellore, சென்னை, தண்ணீர், ஜோலார்பேட்டை, ரயில், டேங்கர், தண்ணீர் பற்றாக்குறை, வேலூர்

சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஜோலார்பேட்டையில் இருந்து ரயிலின் மூலம் தண்ணீர் வந்தது.

Advertisment

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து, குடிநீருடன் இன்று (ஜூலை 12ம் தேதி) ரயில். சென்னை நோக்கி புறப்பட்டது. வாழை மற்றும் மலர் தோரணங்கள் கட்டி, பூஜை செய்து தண்ணீர் ரயிலை அலுவலர்கள் அனுப்பி வைத்தனர் . இந்த ரயில் சென்னை வில்லிவாக்கம் இன்று காலை 11 30 மணியளவில் வந்து சேர்ந்தது.

அமைச்சர்கள் வரவேற்பு : சென்னையில் வில்லிவாக்கம் ரயில்வே ஸ்டேசனில் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார் மற்றும் பெஞ்சமின் ரயிலை வரவேற்றனர்.

இதற்காக, ஜோலார்பேட்டை , வில்லிவாக்கம் ஆகிய இரு பகுதிகளிலும், குழாய் அமைக்கும் பணிகள் செய்யப்பட்டன. இதற்காக, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, 50 கலன்களில், 25 லட்சம் லிட்டர் நீர், ரயில்களில் கொண்டு வரப்பட்டு, இன்று முதல், பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது. தினசரி, நான்கு சுற்றுகள் அடிப்படையில், 1 கோடி லிட்டர் நீர் கொண்டு வரப்படும். அங்கிருந்து, குழாய் வழியாக, கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு, நீர் கொண்டு செல்லப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு வினியோகிக்கப்படும்.

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: