Advertisment

மழை நீர் வடிந்து தூய்மை பணி: சென்னையில் இன்று 4 பள்ளிகளுக்கு விடுமுறை

பூந்தமல்லியில் உள்ள 3 பள்ளிகள் மற்றும் போரூரில் உள்ள ஒரு பள்ளிக்கு இன்று(டிச.12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
School student tamil nadu

சென்னையில் புயல் காரணமாக கடந்த வாரம் மழை கொட்டித் தீர்த்த நிலையில், 1 வார காலம் ஆகியும் இன்னும் சில பகுதிகளில் மழை நீர் வடியவில்லை. மாநகராட்சி நிர்வாகம் இதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.  இந்நிலையில் பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கி வடிந்து வரும் நிலையில் சென்னையில் உள்ள 4 பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.12)  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

Advertisment

மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த வாரம் (டிச.4) சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் சாலை, வீடுகளில் வெள்ள நீர் தேங்கியது. மழை நீர் தேங்கியதால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் நேற்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. 

எனினும் சென்னையில் உள்ள 4 பள்ளி வளாகத்தில் தேங்கிய மழை நீர் இன்னும் முழுமையாக வடியவில்லை. மழை நீர் வடியாத காரணத்தால் நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று (டிச.12) தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

பூந்தமல்லியில் உள்ள சரோஜினி வரதப்பன், மகளிர் மற்றும் ஆண்கள் அரசு மேல் நிலைப் பள்ளி மற்றும் சின்ன போரூரில் உள்ள மகளிர் மேல் நிலைப் பள்ளி ஆகிய 4 பள்ளிகளுக்கு மட்டும் இன்று  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  பள்ளியில் மழை நீர் வடிந்து வரும் நிலையில் இன்று தூய்மைப் பணிகள் நடைபெறுகின்றன. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

chennai flood
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment