Advertisment

சென்னையில் இந்த 4 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

மழைநீர் வடியாத காரணத்தால் சென்னையில் குறிப்பிட்ட 4 பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.11) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
School Student

சென்னையில் புயல் காரணமாக கடந்த வாரம் மழை கொட்டித் தீர்த்த நிலையில், 1 வார காலம் ஆகியும் இன்னும் சில பகுதிகளில் மழை நீர் வடியவில்லை. பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கியுள்ள நிலையில் சென்னையில் உள்ள 4 பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.11)  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

Advertisment

மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த வாரம் (டிச.4) சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் சாலை, வீடுகளில் வெள்ள நீர் தேங்கியது. மழை நீர் தேங்கியதால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். மாநகராட்சி ஊழியர்கள், காவல்துறை, தன்னார்வலர்கள் எனப் பலரும்  மக்களுக்கு உதவி வருகின்றனர். மாநகராட்சி ஊழியர்கள் வெள்ள நீர் வெளியேற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

மழை பெய்து ஒரு வார காலம் ஆகியும் சில பகுதிகளில் இன்னும் மழை நீர் வடியவில்லை. மழை காரணமாக ஒரு வார விடுமுறைக்குப் பின்னர் சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுகிறது. இந்நிலையில், மழைநீர் வடியாத காரணத்தால் சென்னையில் 4 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை போரூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பூந்தமல்லியில் உள்ள சரோஜினி வரதப்பன் மேல்நிலைப் பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் புதூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 4 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai chennai flood
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment