/tamil-ie/media/media_files/uploads/2022/09/chennai-water-strike.jpg)
Chennai Tamil News: சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியம் (மெட்ரோவாட்டர்) சனிக்கிழமையன்று (17.09.2022) குடிநீர் குழாய்களை இணைக்க திட்டமிட்டுள்ளதால், கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் மண்டலங்களின் சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படவுள்ளது.
ராமகிருஷ்ணா நகரில் உள்ள மேல்நிலைத் தொட்டியில் இருந்து ஆற்காடு சாலை மற்றும் காமராஜர் சாலை சந்திப்பில் உள்ள தண்ணீர் பிரதான குழாயுடன் குடிநீர் குழாய் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகள் காரணமாக எம்ஜிஆர் நகர், கேகே நகர், நெசப்பாக்கம், ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, ராமாபுரம், வளசரவாக்கம், மதுரவாயல், தாயிஷா அடுக்குமாடி குடியிருப்புகள், சூளைமேடு ஆகிய பகுதிகளுக்கு சனிக்கிழமை காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும்.
பொதுமக்கள் போதிய தண்ணீரை முன்கூட்டியே சேமித்து வைக்குமாறு குடிநீர் மேலாளர் கேட்டுக்கொண்டுள்ளார். லாரி தண்ணீர் சப்ளை செய்ய குடியிருப்பாளர்கள் 8144930910 (கோடம்பாக்கம்) மற்றும் 8144930911 (வளசரவாக்கம்) ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இதற்கிடையில், நகரம் முழுவதும் சுமார் 2,000 தெருக்களில் உள்ள கழிவுநீர் பாதைகளை சுத்தம் செய்ய மெட்ரோவாட்டர் முடிவு செய்துள்ளது. "செப்டெம்பர் 16 மற்றும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் கழிவுநீர் பாதைகள் பெருமளவில் சுத்தம் செய்யப்படும்" என்று மற்றொரு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
1,998 தெருக்களில் பணிகள் நடத்தப்பட்டு, 11,395 மேன்ஹோல்கள் அகற்றப்படும். "இயக்கத்தின் போது, கழிவுநீர் குழாய்கள் மற்றும் மேன்ஹோல்கள் தூர்வாரப்படும். 282 டிசில்டிங் இயந்திரங்கள், 161 ஜெட்-ரோடிங் இயந்திரங்கள், 57 சூப்பர் சக்கர்ஸ் என 500 இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.