சென்னை மக்கள் கவனத்திற்கு: இந்த ஏரியாக்களில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோயம்பேடு பிரதான குழாய் இணைக்கும் பணி நடைபெற உள்ளதால் புதன்கிழமை முதல் 2 நாட்கள் 4 மண்டலங்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Chennai Corporation action, Madhavaram people to get Metro water supply in pipeline, மாதவரம் மக்களுக்கு குழாய் மூலமாக குடிநீர், 11 ஆண்டுகளுக்குப் பிறகு சாத்தியம் ஆக்கும் சென்னை மாநகராட்சி, Chennai Corporation, Madhavaram people to get Metro water supply by Dec

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் கோயம்பேடு பிரதான குழாயை இணைக்கும் பணியை மேற்கொள்ள உள்ளதால், அம்பத்தூர், அண்ணாநகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களுக்கு புதன்கிழமை காலை 6 மணி முதல் 48 மணி நேரத்திற்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

கோயம்பேடு ரவுண்டானா மேம்பாலத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. CMWSSB குடியிருப்பாளர்கள் 2 நாட்களுக்கு போதுமான தண்ணீரை சேமித்து வைத்து கொள்ளவும், அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் பெற தங்கள் இணையதளத்தில் பதிவு செய்யவும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் குழாய் மூலம் நீர் விநியோகம் செய்யப்படாத பகுதிகளுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் வழக்கம் போல் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment
Advertisements
Water

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: