சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் கோயம்பேடு பிரதான குழாயை இணைக்கும் பணியை மேற்கொள்ள உள்ளதால், அம்பத்தூர், அண்ணாநகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களுக்கு புதன்கிழமை காலை 6 மணி முதல் 48 மணி நேரத்திற்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு ரவுண்டானா மேம்பாலத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. CMWSSB குடியிருப்பாளர்கள் 2 நாட்களுக்கு போதுமான தண்ணீரை சேமித்து வைத்து கொள்ளவும், அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் பெற தங்கள் இணையதளத்தில் பதிவு செய்யவும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் குழாய் மூலம் நீர் விநியோகம் செய்யப்படாத பகுதிகளுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் வழக்கம் போல் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“