/tamil-ie/media/media_files/uploads/2023/07/katchi.jpg)
ஸ்டாலின்
ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் கொள்கையில் உறுதியோடு நிற்போம் என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
திராவிட இயக்க எழுத்தாளர் திருநாவுக்கரசுவின் இல்ல திருமண விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஸ்டாலின் பேசியதாவது “ தமிழ்நாட்டில் திராவிட ஆட்சி நடந்து வருகிறது. தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. காலை சிற்றுண்டி, பெண்களுக்கு இலவச பேருந்து, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்டவை உதாரணம். வாக்குறிதிகளை பாஜக நிறைவேற்றியதா? 2014-ல் கொடுத்த வாக்குறிதிகளில் ஒன்றைவாது பாஜக நிறைவேற்றியதா? ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என சொன்னதை செய்யவில்லை. கருப்பு பணத்தை மீட்டு ரூ. 15 லட்சம் தருவேன் என சொன்னார்கள், இதுவரை ரூ. 15 -கூட தரவில்லை. சர்வாதிகார ஆட்சியை அப்புறப்படுத்த எதிர்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளோம்.
யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதைவிட, யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் கொள்கையில் உறுதியோடு நிற்போம்.” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.