Advertisment

சென்னையில் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை!

Weather News In Tamil: தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்கிறது. 23-ம் தேதி வரை மழை தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Weather Tamil News, Weather News In Tamil, Rain, Chennai Rain, வானிலை, வானிலை அறிக்கை, இன்றைய வானிலை அறிக்கை

Weather Tamil News, Weather News In Tamil, Rain, Chennai Rain, வானிலை, வானிலை அறிக்கை, இன்றைய வானிலை அறிக்கை

Tamil Nadu Weather News In Tamil: தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்கிறது. 23-ம் தேதி வரை மழை தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 6 செ.மீ மழை பதிவாகி இருக்கிறது.

Advertisment

Weather Latest Report: 7 மாவட்டங்களில் மழை; மேலும் ஒரு நாள் தொடரும்: வானிலை அறிக்கை

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (19-ம் தேதி) நண்பகல் 12 மணிக்கு வெளியிட்ட வானிலை அறிக்கை வருமாறு: தமிழ்நாட்டில் இன்று குறிப்பிட்ட பகுதிகளில் கன மழை பெய்கிறது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் கன மழை வாய்ப்பு இருக்கிறது.

Weather Tamil News, Weather News In Tamil, Rain, Chennai Rain, வானிலை, வானிலை அறிக்கை, இன்றைய வானிலை அறிக்கை Weather Chennai News: அதிகபட்சமாக கடலூரில் 6 செமீ மழை

Chennai Weather: வானிலை அறிக்கை

நாளை முதல் 22-ம் தேதி வரையும் தமிழகத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் கன மழை வாய்ப்பு இருக்கிறது. 23-ம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை இருக்கும். இன்றும், நாளையும் தமிழ்நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளில் இடி-மின்னல் இருக்கும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரங்களில் வானம் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. வெப்ப நிலை அதிகபட்சம் 32 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். மேற்கண்ட தகவலை சென்னை வானிலை ஆய்வு மைய புயல் எச்சரிக்கை பிரிவு அதிகாரி கார்த்திகேயன் அறிக்கையில் கூறியிருக்கிறார்.

வெப்பச் சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பெய்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 6 செமீ மழை பதிவாகி இருக்கிறது. திருச்செந்தூர், கடலூர் ஆட்சியர் அலுவலக பகுதி ஆகிய இடங்களில் 5 செமீ, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 4 செமீ, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் 3 செமீ மழை பதிவாகி இருக்கிறது.

சென்னையில் மழை

சென்னையில் இன்று காலை முதலே பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்ய துவங்கியது. சென்னை தியாகராயநகர், நந்தனம், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் காலை 6 மணி முதல் மழை பெய்து வருகிறது.

 

Tamilnadu Weather
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment