chennai weather, weather today, weather news, latest weather news, today weather news, tomorrow weather news, weather today, weather news, weather news live, weather Chennai, weather Chennai news, weather Chennai news live, weather forecast, weather forecast live, Chennai weather forecast live, Chennai rains, Tamil Nadu weather live, Tamil Nadu weather news, Tamil Nadu rains, school holidays, tamilnadu weatherman, வானிலை, வானிலை அறிக்கை, சென்னை கனமழை, பள்ளிகள் விடுமுறை, IMD Chennai
Weather News: சென்னையில் பட்டினப்பாக்கம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மந்தவெளி, நுங்கம்பாக்கம் ஈக்காட்டுத்தாங்கல், சூளைமேடு, தாம்பரம், பம்மல், மயிலாப்பூர், முடிச்சூர், ஆதம்பாக்கம், தியாகராய நகர் , கே.கே.நகர், கொளத்தூர், கே,கே,நகர், அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. மேலும் 3 மணி நேரம் இடைவிடாது பெய்த கனமழையால் சாலைகள் மற்றும் நகரில் பல இடங்களில் நீர் தேங்கியுள்ளது. தி.நகர் உஸ்மான் சாலையில் தண்ணீர் வெள்ளம்போல் அதிகரித்துள்ளதால் வாகனங்கள் மெதுவாக செல்கிறது. பல துணிக்கடைகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் வாடிக்கையாளர்களும் கடை நிர்வாகிகளும் கடுமையாக அவதிக்குள்ளாகினர்.
கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
Advertisment
Advertisements
சென்னையிலும் விடாது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு மழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக்கில், "சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை காலை வரை விடிய விடிய மழை பெய்யும். மேலும் நெல்லை, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். இந்த மாவட்டங்களில் மற்றும் அல்ல; இன்னும் பல பல மாவட்டங்களில் கனமழை பெய்யப் போகிறது.
வார இறுதி மழையை கொண்டாடுங்கள்; இன்றிரவு மழை வச்சு செய்யப் போகுது" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை நீடிக்கும் என்றும் பருவமழையின் சிறந்த மூன்று நாட்கள் ஆகும் இது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
மேலடுக்குச் சுழற்சி அடுத்த 48 மணி நேரத்தில் மத்திய இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் அரபிக் கடலை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலையில் மழையின் தீவிரம் மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.