weather chennai, weather chennai news, weather tamil nadu, தைப் பொங்கல், வானிலை
Weather news in tamil: தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை, காலையில் பனிமூட்டம் என்றே வானிலை நிலவரம் இருக்கும். ஆனால் பொங்கலையொட்டி சில பகுதிகளில் மழை வாய்ப்பு இருக்கிறது. நாள் வாரியாக வானிலை அப்டேட் அறிய தொடர்ந்து படியுங்கள்.
Advertisment
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று நள்ளிரவு வெளியிட்ட வானிலை அறிக்கையில் இடம்பெற்ற தகவல்கள் வருமாறு:
Chennai imd weather forecast: சென்னை வானிலை
Advertisment
Advertisements
தமிழ்நாடு மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். காலை நேரங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் பனி மூட்டம் நிலவும். சென்னையை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் காலை நேரங்களில் பனி மூட்டம் நிலவும். சென்னையில் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்சம் 29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கிறது.
மழை நிலவரம், நாள் வாரியாக!
ஜனவரி 11: தமிழ்நாடு, புதுவை வறண்ட வானிலை
ஜனவரி 12: தமிழ்நாடு, புதுவை வறண்ட வானிலை, தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை.
ஜனவரி 13: தமிழ்நாடு, புதுவை வறண்ட வானிலை
ஜனவரி 14: தமிழ்நாடு, புதுவை வறண்ட வானிலை
மேற்கண்ட தகவல்களை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதன்படி பொங்கலுக்கு இரு தினங்களுக்கு முன்பு தென் மாவட்டங்களில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மற்றபடி, தமிழகம் முழுவதும் பொங்கலை மக்கள் உற்சாகமாக கொண்டாட வானிலை எந்த விதத்திலும் தடையாக இருக்காது என்றே தெரிகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் குறிப்பிடும்படியாக மழை பதிவு இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.