லட்சத்தீவு, அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில்அதிலும் குறிப்பாக சென்னையில் இன்று காலை நல்ல மழை பெய்து. மாதவரம், வியாசர்பாடி,கிண்டி, ஆலந்தூர், மடிப்பாக்கம், மேடவாக்கம், அடையாறு, வேளச்சேரியில் மலையின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், “காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் தமிழக உள்மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும்.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை முடிவடையும் நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை மேலும் 4 நாட்களுக்கு தொடர வாய்ப்பு உள்ளது.