Weather News Today: தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கன மழை பெய்கிறது. மேலும் ஒருநாள் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட இடங்களில் கன மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம் புவனகிரியில் அதிகபட்சமாக 8 செமீ மழை பதிவாகி இருக்கிறது.
Weather Latest: தமிழகத்தில் கன மழை குறைகிறது: இன்றும் மழை பெய்யும் மாவட்டங்கள் இவைதான்!
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 20) நண்பகலில் வெளியிட்ட அறிக்கை வருமாறு: தமிழ்நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளில் இன்று கனமழை பெய்கிறது. குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும்.
Tamil Nadu Rains Today: கடலூர் மாவட்டம் புவனகிரியில் 8 செமீ மழை
Chennai Weather Forecast: இன்றைய வானிலை
21-ம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் குறிப்பிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யும். நவம்பர் 22-ம் தேதி தமிழ்நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளில் கன மழை பெய்யும். 22-ம் தேதி தமிழகம், புதுவை கடலோரத்தில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். உள் தமிழகத்தில் அன்று சில இடங்களில் மழை இருக்கும். 23-ம் தேதி தமிழகம், புதுவையில் குறிப்பிட்ட இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இன்றும், நாளையும் தமிழகத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் இடி-மின்னல் இருக்கும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழையும், இடியுடன் மழையும் இருக்கும். வெப்ப நிலை அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸ் என இருக்கும். இவ்வாறு அறிக்கையில் தகவல்கள் உள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் புவனகிரியில் 8 செமீ மழை பதிவாகி இருக்கிறது. கடலூர் ஆட்சியர் அலுவலக பகுதியில் 7 செமீ, காஞ்சிபுரம் மாவட்டம் சத்யபாமா பல்கலைக்கழக பகுதியில் 6 செமீ, கடலூர், மகாபலிபுரம், சோழவரம் ஆகிய இடங்களில் 5 செமீ என மழை பெய்திருக்கிறது.
சென்னை வானிலை
சென்னையின் நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, எழும்பூர், புரசைவாக்கம், பட்டினப்பாக்கம், அடையாறு, திருவல்லிக்கேணி, பூந்தமல்லி, குன்றத்தூர், மாங்காடு, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், கிண்டி மற்றும் தியாகராய நகர் பகுதிகளில் காலை முதல் மழை வெளுத்து வாங்குகிறது. ஆனால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது. அவை வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.