வானிலை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மற்றும் நாளை கனமழைக்கு வாய்ப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
weather report, வானிலை

weather report, வானிலை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மற்றும் நாளை காற்றத்தழுத்தம் காரணமாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

வானிலை நிலவரம்:

சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், “வடமேற்கு வங்க கடலில், ஒடிசா கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தொடா்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. அது வலுவடைய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சோியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். ஒருசில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

Advertisment
Advertisements

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகா் மாவட்டம் கோவிலாங்குளத்தில் 70 மி.மீ., செங்கல்பட்டு, விளாத்திகுளம், தாமரைப்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 40 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.” என்று தெரிவித்தார்.

கடந்த 3 நாட்களாக வாட்டி வதைத்த வெயிலால், கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ள செய்தியால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tamilnadu Weather

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: