Advertisment

மீண்டும் புயல் உருவாகிறதா? வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் புதிய அறிவிப்பு

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai weather

chennai weather

டிசம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச்  சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன், "நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய கடல் பகுதியில் நிலவிய வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று(டிச.12) தெற்கு வங்கக்கடல் பகுதிக்கு நகர்ந்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். இது டிச.15ல் ஆழ்ந்த காற்றழுத்தமாக மாறக் கூடும். இதன் காரணமாக டிசம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

இன்றைய வானிலை நிலவரம் : 24 மணி நேரத்தில் புயலாக மாறுகிறதா காற்றழுத்த தாழ்வு பகுதி?

மீனவர்கள் டிச.13ம் தேதி, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கும், டிச.14ல் தென்மேற்கு கடலின் மத்திய பகுதிக்கும், டிச.15ல் தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதிக்கும், மீன்பிடிக்க செல்ல வேண்டாம். ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் இன்று மாலைக்குள் கரைக்கு திரும்பும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என தெரிவித்துள்ளார்.

புயல் உருவாக வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, "இப்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதன்பின் வானிலை மாற்றத்தை வைத்து தான் புயல் குறித்து உறுதியாக சொல்ல முடியும்" என்றார்.

மேலும் படிக்க - வரும் 15 ஆம் தேதி மையம் கொள்ளுமா புயல்? - இந்திய வானிலை மையம் சொல்வது என்ன

Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment