Weather Today and Weather in Chennai : தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், வரும் நாட்களில், தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisment
சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வரும் நான்கு நாட்களில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர கூடும் என தெரிவித்தார். இதன் காரணமாக, தென்தமிழகம், புதுவை மற்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவித்த புவியரசன், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றார்.
சென்னையை பொருத்தவரை, லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் புவியரசன் தெரிவித்தார். புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, மணிக்கு 50 கிலோ மீட்டரில் இருந்து 60 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்றும், இதனால் மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தென் தமிழக கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று புவியரசன் அறிவுறுத்தியுள்ளார்.
Advertisment
Advertisements
கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news