வங்கக் கடலில் புயல் சின்னம்: தமிழகத்தில் மழை; மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை

மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வும் அமையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வும் அமையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

author-image
WebDesk
New Update
weather warning, weather forecast, rain forecast, வானிலை அறிக்கை, வானிலை ஆய்வு மையம், மீனவர்களுக்கு எச்சரிக்கை, வங்கக் கடலில் புயல் சின்னம், தமிழகத்தில் மேற்கு மாவட்டங்களில் மழை, weather warning for fishermen, weather forecast for tamil nadu and puduchery, rain, tamil nadu rain

மன்னார் வளைகுடா, மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் வங்க கடலில் புயல் சின்னம் ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி திண்டுக்கல், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

செப்டம்பர் 12ம் தேதி மாலை நிலைகொண்டிருந்த காற்றழுத்த மண்டலம் இன்று (செப்டம்பர் 13) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வடக்கு ஒரிசா கடலோர பகுதியில் நிலைகொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மன்னார் வளைகுடா, மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 13) நீலகிரி, கோயம்புத்தூர், தேனி திண்டுக்கல், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய திருப்பூர், தென்காசி மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்லது.

Advertisment
Advertisements

செப்டம்பர் 12ம் தேதி மாலை நிலைகொண்டிருந்த காற்றழுத்த மண்டலம் இன்று (செப்டம்பர் 13) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வடக்கு ஒரிசா கடலோர பகுதியில் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக்கூடும்.

அதே போல, மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 கி.மீ முதல் 45 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது. அதே போல, இன்று மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வும் அமையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே போல, அரபிக் கடல் பகுதிகளில் செப்டம்பர் 13 முதல் செப்டம்பர் 17ம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Weather Forecast Report Rain In Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: