சென்னையில் இன்னும் மழை தொடரும்; திடீரென பெய்ய இதுதான் காரணம்: பிரதீப் ஜான்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை திடீரென கனமழை பெய்தது. இந்த திடீர் மழைக்கு வெப்பச்சலனமே முக்கிய காரணம் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை திடீரென கனமழை பெய்தது. இந்த திடீர் மழைக்கு வெப்பச்சலனமே முக்கிய காரணம் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
pradeep john

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 22, 2025) காலை திடீரென கனமழை பெய்தது. நகரின் பல பகுதிகளான கிண்டி, அண்ணா நகர், மந்தைவெளி, ஆதம்பாக்கம், நுங்கம்பாக்கம், அடையார், வடபழனி மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பதிவாகியுள்ளது. இந்த திடீர் மழைக்கு வெப்பச்சலனமே முக்கிய காரணம் என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னையில் பல இடங்களில் குறிப்பிடத்தக்க அளவில் மழை பதிவாகியுள்ளது. துரைப்பாக்கத்தில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழையும், ராஜா அண்ணாமலைபுரத்தில் 10 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. மேலும், அடையாரில் 9 செ.மீ., ஈஞ்சம்பாக்கம் மற்றும் பள்ளிக்கரணையில் தலா 8 செ.மீ., நுங்கம்பாக்கம் மற்றும் நீலாங்கரையில் தலா 6.7 செ.மீ. மற்றும் வேளச்சேரியில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலின்படி, நுங்கம்பாக்கம், அடையார், வடபழனி, ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய பகுதிகளில் அதிகாலை 5 மணி முதல் 50 நிமிடத்தில் 5 செ.மீ. மழை பதிவானது. இந்த கனமழை காரணமாக நகரின் பல்வேறு சாலைகளில் நீர் தேங்கி, வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் அளித்த தகவலின்படி, தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக வரும் நாட்களில் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டின் 29 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

சென்னையில் பெய்த இந்த திடீர் கனமழைக்கு வெப்பச்சலனமே முக்கிய காரணமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் அதிக வெப்பம் காரணமாக ஏற்படும் நீராவி சுழற்சி, குளிர்ந்த காற்றுடன் இணைந்து மேகங்களை உருவாக்குகிறது. இந்த மேகங்கள் கனமழையாக பொழிகிறது. வெப்பச்சலனம் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே உருவாகும் நிகழ்வு என்பதால், நகரின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரே சீரான மழை பதிவாகவில்லை. 

Chennai Rain Pradeep John

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: