Advertisment

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: மேற்கு வங்க தீவிரவாதி சென்னையில் கைது

உபா வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கொல்கத்தாவிற்கு அழைத்து செல்வதற்கான நடைமுறைகளில் மேற்கு வங்க போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
West Bengal Terrorist arrested in Chennai Koyambedu Tamil News

கோயம்பேட்டில் தலைமறைவாகி கட்டுமான பணிசெய்து வந்த தீவிரவாதி அனோவரை கைதுசெய்தது மேற்குவங்க போலீஸ்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

உபா சட்டத்தில் தேடப்பட்டு வந்த அனோவர் என்ற பயங்கரவாதி சென்னை கோயம்பேட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்கத்தை சேர்ந்த அனோவர் அன்சார், அல்கொய்தா தீவிரவாத அமைப்புக்கு ஆதரவான 'அல் இஸ்லாம்' என்ற பயங்கரவாத அமைப்பில் தொடர்புடையவர் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த அனோவரை மேற்கு வங்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

Advertisment

ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஹபிபுல்லா என்ற பயங்கரவாதி கொடுத்த தகவலின் பேரில் அனோவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசுக்கு எதிராக சட்ட விரோத செயலில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் அனோவர் மீது வழக்குகள் உள்ளன. கைது செய்யப்பட்ட அனோவரை கொல்கத்தாவிற்கு அழைத்து செல்வதற்கான நடைமுறைகளில் மேற்கு வங்க போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Chennai Terrorist
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment