தொடர்ந்து எரியும் காட்டுத் தீ: ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரம்

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் 6-வது நாளாக பற்றி எரியும் தீ. ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி.மாவட்ட ஆட்சியர், வன அலுவலர் பார்வையிட்டு வருகின்றனர்.

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் 6-வது நாளாக பற்றி எரியும் தீ. ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி.மாவட்ட ஆட்சியர், வன அலுவலர் பார்வையிட்டு வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
காட்டுத் தீ

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் 6-வது நாளாக பற்றி எரியும் தீ. ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி.மாவட்ட ஆட்சியர், வன அலுவலர் பார்வையிட்டு வருகின்றனர்.

Advertisment

கோவை மாவட்டம் ஆலாந்துறை ஊராட்சிக்குட்பட்ட நாதேகவுண்டன் புதூர், மச்சினாம்பதி, பெருமாள்பதி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 11-ந் தேதி காட்டுத்தீ ஏற்பட்டது.அங்குள்ள காய்ந்த புற்கள், சருகுகளில் தீ பற்றி எரிந்து வருகிறது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோவை மாவட்ட வனத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருந்த போதிலும் தீ வனம் முழுவதும் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

publive-image
Advertisment
Advertisements

இன்று 6-வது நாளாக வனத்தில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.தரைப்பகுதியில் உள்ள புற்கள், காய்ந்த சருகுகளில் தீ பரவி வருகிறது. வனத்தில் உள்ள சில மூங்கில் மரங்கள் தீயில் எரிந்துள்ளன. குறிப்பிட்ட இடங்களில் தீ தடுப்பு கோடுகளை அமைத்து, எதிர் தீ வைத்து தீ மேற்கொண்டு பரவாமல் தடுக்கப்பட்டு வருகிறது.

காட்டுத்தீ காரணமாக வனவிலங்குகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாவட்ட நிர்வாகம் மூலம் விமான படைக்கு கோரிக்கை வைக்கப்பட்டு தற்போது ஹெலிகாப்டரில் பாக்கெட் மூலம் தண்ணீர் தெளித்து தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

publive-image

பெருமாள் பதி மலை பகுதியில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் மற்றும் மாவட்ட வன அலுவலர்கள் ஆகியோர் தீயை அணைக்கும் பணியினை பார்வையிட்டு வருகின்றனர்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: