கோவையில் பிடிபட்ட அரிய வகை வெள்ளை நிற நாகப் பாம்பு: வனத்துறையிடம் ஒப்படைப்பு

பாம்பானது பார்சியல் ஆல்பினோ என்ற மரபணு குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதால் வெள்ளை நிறத்தில் இருப்பதாக பாம்புபிடி வீரர் மோகன் கூறினார்.

பாம்பானது பார்சியல் ஆல்பினோ என்ற மரபணு குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதால் வெள்ளை நிறத்தில் இருப்பதாக பாம்புபிடி வீரர் மோகன் கூறினார்.

author-image
WebDesk
New Update
Cobra 1.jpg

கோவை சுந்தராபுரம் பகுதியில் வீட்டின் தண்ணீர் தொட்டியில் பதுங்கி இருந்த வெள்ளை நிறத்தில் காணப்படும் அரிய வகை நாகப் பாம்பு  பிடிக்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கபட்டது. 

Advertisment

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தொட்டியில் வீட்டின் உரிமையாளர் பாம்பு ஒன்று பதுங்கிருப்பதை பார்த்துள்ளார். உடனடியாக வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் பாம்பு பிடி வீரரான மோகன் என்பவரை அழைத்து, தண்ணீர் தொட்டிக்குள் பாம்பு இருப்பதனை தெரிவித்துள்ளார்.  

cobra 2.jpg

பின்னர் அங்கு சென்ற பாம்புபிடி வீரர் மோகன் அந்த அந்த பாம்பை பார்க்கும் போது அந்த பாம்பானது பார்சியல் ஆல்பினோ என்ற மரபணு குறைப்பாட்டால் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கப்படும் பாம்பு என்பது தெரியவந்தது.  பின்னர் அந்த இரண்டடி நீளம் கொண்ட பாம்பை  பத்திரமாக பிடித்த மோகன் அதனை வனத்துறையிடம் ஒப்படைத்தார்.  

Advertisment
Advertisements

cobra 3.jpg

கோவையில் சில மாதங்களுக்கு முன்பாக இதே போன்று வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் நாகப்பாம்பு பிடிபட்டது. தற்போது மீண்டும் வெள்ளை நாகப்பாம்பு பிடிபட்டிருக்கின்றது.

cobra 4.jpg

செய்தி: பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: