New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/02/karthi.jpg)
சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றம், சட்டப்பேரவை தேர்தலில் திமுக, காங்கிரஸ் கட்சி கூட்டணி வெற்றிப்பெற்றதை போல் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றிப்பெறுவோம் என தெரிவித்தார்.
அப்போது அவரிடம், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியவில்லை என பிரதமர் மோடி பேசியதை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், அமைப்புரீதியாக காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் கடந்த 1967 முதல் ஆட்சிக்கு இல்லை என்கிற எதார்த்த உண்மையை நானும் ஏற்றுக்கொள்கிறேன். திராவிட கட்சிகளுக்கு இனையாக காங்கிரஸ் கட்சிக்கு கட்டமைப்பு தமிழகத்தில் இல்லை. அதன் காரணமாகவே, எங்கள் கட்சி தோல்வியடைகிறது. ஆனால், எங்கள் சித்தாந்தத்தில் தோல்வியடையவில்லை. எங்களை நிராகரிக்கிறார்கள் என்று சொல்லவே முடியாது. அப்படி நிராகரிக்கிறார்கள் என்றால், எப்படி நாடாளுமன்றத்திலும், கூட்டணியிலும் வெற்றிபெறுகிறோம்.
அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் போன்ற தலைவர்களை காங்கிரஸ் கட்சி உருவாக்கவில்லை என்பது ஏதார்த்த உண்மை. அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்" என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.