தமிழ்நாட்டில் கிரானைட் முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு காவல் பாதுகாப்பு வழங்கப்படாதது குறித்து, மதுரை உயர்நீதிமன்றம் காவல்துறையை கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளது.
சகாயம் ஐ.ஏ.எஸ். லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என்ற கொள்கையை பின்பற்றி, நாமக்கல் மற்றும் மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேர்மையான ஆட்சியாளராக பணியாற்றினார். அவரது பணிக்காலத்தில் பலமுறை இடமாற்றம் செய்யப்பட்டதுடன், கிரானைட் முறைகேடு தொடர்பான விசாரணையில் அவர் முக்கிய பங்கு வகித்திருந்தார். இந்த வழக்கில் சட்ட ஆணையராக வாக்குமூலம் அளிக்க அவர் ஆஜராகவில்லை. உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், போலீஸ் பாதுகாப்பு விலக்கப்பட்டதால் நேரில் ஆஜராக முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, நீதிபதி அதிருப்தி தெரிவித்ததுடன், தொடர்ந்து இந்த நிலைமை நீடித்தால் சகாயம் ஐஏஎஸ்-க்கு மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்பு வழங்க நேரிடும் என எச்சரித்தார். வழக்கு அடுத்த கட்ட விசாரணைக்காக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதே நேரத்தில், தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், “சகாயம் ஐஏஎஸ்-க்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படும்; அவர் பயமின்றி வாக்குமூலம் அளிக்கலாம்” என உறுதியளித்துள்ளார்.
தனக்கு போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதால், விசாரணையின்போது ஆஜராகாமல் தவிர்த்ததாக சகாயம் ஐஏஎஸ் கூறினார். மேலும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சகாயம் ஐஏஎஸ் மீண்டும் விசாரணக்கு ஆஜராகாத நிலையில், அவருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்காததற்கு நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
இதைத் தீவிரமாக கருதிய நீதிபதி, இதே நிலைமை நீடித்தால் சகாயம் ஐஏஎஸ்-க்கு மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்க நேரிடும் என கூறினார். பின்னர் வழக்கின் அடுத்தகட்ட விசாரணை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. கிரானைட் முறைகேடு வழக்கில் விசாரணை அதிகாரி என்ற முறையில் சகாயம் ஐஏஎஸ்-இன் வாக்குமூலம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
முன்னதாக சகாயம் ஐஏஎஸ் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறிய நிலையில், அவருக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கப்படும் என தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்தார். சகாயத்தின் பாதுகாப்பை மாநில காவல் துறை உறுதிப்படுத்தும் என்றும், அவர் எந்தவித பயமும் இன்றி வாக்கமூலம் அளிக்கலாம் என்றும் சங்கர் ஜிவால் அறிவித்தார்.