Advertisment

மக்காச் சோள பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானை, பன்றிகள் - விவசாயிகள் வேதனை

கோவையில், மக்காச் சோள பயிர்களை விலங்குகள் தொடர்ச்சியாக சேதப்படுத்தி வரும் சம்பவம் விவசாயிகள் இடையே கவலை அளித்துள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Wild pigs

கோவையில் மக்காச் சோள பயிர்களை காட்டு யானைகள் மற்றும் பன்றிகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Advertisment

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் இரண்டாயிரம் ஏக்கருக்கு மேலாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதில், வெங்காயம், தக்காளி, தென்னை, வாழை, உள்ளிட்ட பயிர்களை அதிக அளவில் அதிகளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

சமீப நாள்களில் மலை அடிவார பகுதியில் இருந்து காட்டு யானைகள் மற்றும் காட்டுப் பன்றிகள், விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால், விவசாயம் பெருமளவு பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், ஆலாந்துறை அடுத்த செம்மேடு, முட்டத்துவயல் பகுதியில் நடவு செய்யப்பட்டிருந்த மக்காச் சோள பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், ஒற்றை காட்டு யானை மற்றும் காட்டு பன்றிகள் அவற்றை சேதப்படுத்தியுள்ளன.

Advertisment
Advertisement

இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், விலங்குகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

செய்தி - பி.ரஹ்மான் 

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Elephant Attack Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment