/indian-express-tamil/media/media_files/t8Fx040hxvbidzIRphGb.jpg)
தி.மு.கவை விட அ.தி.மு.க அதிக இடங்கள் கொடுத்தாலும், அவர்களுடன் கூட்டணி வைத்துகொள்ள மாட்டோம் என்று காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜ்குமார் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட செல்வப் பெருந்தகை பேசியதாவது ” தமிழ்நாட்டில் பா.ஜ.க நோட்டா வாக்குகளை விட குறைவாக வாக்குகளையேபெரும். தமிழக மக்களின் மனசாட்சியாக ஆட்சி செய்து வரும் முதல்வர் காங்கிரஸ்கட்சிக்கும் மனசாட்சிப்படி உரிய தொகுதிகளை வழங்குவார் என்று எதிர்பார்க்கிறேன். 400 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். தி.மு.கவுடன் பல ஆண்டுகளாககூட்டணியில் உள்ளோம். தி.மு.க-வை விட அதிக இடங்களை ஒதுக்கினாலும் அ.தி.மு.க-வுடன் கூட்டணி சேரமாட்டோம்.
தென் மாவட்டங்கள் பேரிடரால் பாதிக்கப்பட்ட போது ரூ. 37,000 கோடி நிவாரண உதவி கேட்ட நிலையில், பிரதமர் ஒரு பைசா கூடநிதி ஒதுக்கவில்லை. அவர் எந்த முகத்துடன்தேர்தலில் மக்களை சந்திப்பார். எய்ம்ஸ்மருத்துவமனைக்குஇரண்டாவது முறையாக அடிக்கல் நாட்டியுள்ளபிரதமர் மக்கள் பிரதிநிதிகளை அழைத்தால் உண்மை தெரிந்துவிடும் என்பதால் யாரையும் அழைக்கவில்லை. ராமரை முன்னிறுத்தி தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற மோடியின் எண்ணம் எப்போதும் நிறைவேறாது” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.