Advertisment

துபாய்க்கு செல்ல 68 சிம்கார்டுகள் வைத்திருந்த பெண்; தடுத்து நிறுத்திய சென்னை விமான நிலைய அதிகாரிகள்; காரணம் என்ன?

சென்னையில் இருந்து துபாய் செல்ல இருந்த பெண் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையில் சிம் கார்டுகளை எடுத்துச் சென்றதால், சந்தேகம் அடைந்த சென்னை விமான நிலைய அதிகாரிகள், அந்த பெண்ணை போலீஸாரிடம் புதன்கிழமை ஒப்படைத்தனர். இதனால், அவர் துபாய் செல்லும் விமானத்தை தவறவிட்டார்.

author-image
WebDesk
New Update
sim cards

துபாய்க்கு செல்ல 68 சிம்கார்டுகள் வைத்திருந்த பெண்; தடுத்து நிறுத்திய விமான நிலைய அதிகாரிகள்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னையில் இருந்து துபாய் செல்ல இருந்த பெண் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையில் சிம் கார்டுகளை எடுத்துச் சென்றதால், சந்தேகம் அடைந்த சென்னை விமான நிலைய அதிகாரிகள், அந்த பெண்ணை போலீஸாரிடம் புதன்கிழமை ஒப்படைத்தனர். இதனால், அவர் துபாய் செல்லும் விமானத்தை தவறவிட்டார். 

Advertisment

போலீசாரின் விசாரணையில், அந்த பெண் ஆன்லைனில் ரம்மி விளையாட விரும்பும் உறவினர் மற்றும் அங்கு பணிபுரியும் அவரது நண்பர்களுக்கு சிம்கார்டுகளை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த ரோஜா (40) என்பவர் வீட்டு பணிப் பெண்ணாகப் பணிபுரிய துபாய்க்குச் செல்வதற்காக புதன்கிழமை சென்னை விமான நிலையத்துக்கு வந்தார்.

அவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்தபோது, அந்த பெண்ணிடம் ஏராளமான சிம் கார்டுகள் இருப்பதை விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த சிம் கார்டுகள் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்ற சந்தேகத்தின் பேரில், குடிவரவு அதிகாரிகள் அவரது விமான பயணத்தை ரத்து செய்து விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், துபாயில் பணிபுரியும் தனது மருமகனுக்கு வழங்குவதற்காக தனது சகோதரர் இந்த சிம்கார்டுகளை தன்னிடம் கொடுத்ததாக கூறியுள்ளார். போலீசார் அந்த பெண்ணின் சகோதரரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஒரு சிம் கார்டுக்கு 400 ரூபாய் என அனைத்து சிம் கார்டுகளையும் ஒரு ஏஜென்டிடம் வாங்கியதாக அவர் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. துபாயில் உள்ள தொழிலாளர்கள் ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவதற்காக இந்த சிம்கார்டுகல் எடுத்துச் செல்லவிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சிம் கார்டுகளைக் கைப்பற்றிய போலீசார், அந்த பெண்ணின் சகோதரரை அழைத்து அவரிடம் அளித்தனர். இருப்பினும், சிம் கார்டுகளை எடுத்துச் செல்வதற்காக அந்த நபர் மீது வழக்குப் பதிவுசெய்ய சட்டத்தில் இடம் இல்லாததால், அந்த பெண்ணின் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chenai Airport
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment