Advertisment

ஈரோட்டில் வாக்கு சேகரித்த ஸ்டாலின்; மகளிர் உரிமைத் தொகை குறித்து கேள்வி எழுப்பிய அரசு ஊழியர் மனைவி

தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், ஈரோட்டில் வாக்கு சேகரித்தபோது, அவரிடம் ஒரு பெண் தனக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்று கூறி கேள்வி எழுப்பியதற்கு அவர் பதிலளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
MK Stalin 1

மு.க. ஸ்டாலின், ஈரோட்டில் வாக்கு சேகரித்தபோது, அவரிடம் ஒரு பெண் தனக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை எனக் கூறி கேள்வி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், ஈரோட்டில் வாக்கு சேகரித்தபோது, அவரிடம் ஒரு பெண் தனக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்று கூறி கேள்வி எழுப்பியதற்கு அவர் பதிலளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Advertisment

இந்த மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி, பா.ஜ.க கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. தி.மு.க தலைவரும் முதலைமைச்சருமான மு.க. ஸ்டாலின் தி.மு.க மற்றும் தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். 



அந்த வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை காலை ஈரோட்டில் உழவர் சந்தை பகுதியில் நடை பயிற்சி மேற்கொண்டவாறு பொதுமக்களிடையே தி.மு.க வேட்பாளர் கே.இ. பிரகாஷ்க்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

உழவர் சந்தையில் இயங்கி வரும் 120-க்கும் மேற்பட்ட கடைகளில் வியாபாரிகளிடம் காய்கறிகளின் விலையை கேட்டறிந்து  மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். மேலும், காய்கறிகளை வாங்க வந்த பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அப்போது பெண்கள் , குழந்தைகள் முதல்வர் ஸ்டாலின் கை குலுக்கியும் , செல்பியும் எடுத்தனர்.

 

அங்கே சாலை ஓரத்தில் கடைவைத்து காய்கறி விற்பனை செய்து வரும் தூய்மை பணியாளர் மூர்த்தியின் மனைவி காய்கறி வியாபாரி விஜயா, 2 முறை கலைஞர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பம் செய்தும்  தனது விண்ணப்பம் நிராகரிப்பட்டதாக முதல்வர் ஸ்டாலினிடம் கூறினார்.

மேலும், ஓட்டுரிமை உள்ள எனக்கு மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியில்லை என்பது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பினர். ஆயிரம் ரூபாய் கூட வாங்க உனக்கு தகுதியில்லை என வீட்டில் பேசுவதாகவும் ஸ்டாலினிடம் முறையிட்டார். 

இதற்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காரணம் இல்லாமல் நிராகரிக்க வாய்ப்பு இல்லை என்றும் ஏதோ ஒரு காரணம் இருக்கும் என்றும் கூறினார். இதற்கு அந்த பெண், தான் ஒரு அரசு ஊழியரின் மனைவி என தெரிவித்தார். இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இது தான் காரணம் என கூறினார். 



முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் தொடர்ந்து பேசிய அந்த பெண்,   “அவர் (கணவர்) சாப்பிட்டால் மட்டும் போதுமா எனக்கு வயிறு நிறைந்து விடுமா?” என முதல்வரிடம் அந்தப் பெண் கேள்வி எழுப்பினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment