கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற மேல்முறையீடு செய்தவர்களில் 2 லட்சம் பேருக்கு வரும் 10ம்தேதி ரூ. 1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த திட்டம் மூலம் கடந்த செப்டம்பர் மாதம் 15 முதல் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இதைத்தொடர்ந்து 2ம் கட்டமாக கூடுதலாக மகளிர் உரிமைத் தொகை 7 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு சேர்த்து அனுப்பட்டது. இதிலிருந்து மகளின் தொகை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்தது.
மேலும் மகளின் உரிமைத் தொகை திட்டத்தை நன்றாக செயல்படுத்த தாசில்தார்களை நியமித்து தமிழக அரசு சில நாட்களுக்கு முன்பு அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில் தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில், “ கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற மேல்முறையீடு செய்தவர்களில் 2 லட்சம் பேருக்கு வரும் 10ம் தேதி ரூ. 1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
11.85 லட்சம் பேர் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற மேல்முறையீடு செய்திருந்த நிலையில் 2 லட்சம் பேருக்கு இம்மாதமே உதவித்தொகை கிடைக்கும்.
மீதமுள்ளவர்களின் விண்ணப்பங்களும் பரிசீலனையில் உள்ளது. ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு அடுத்த மாதம் முதல் உதவித் தொகை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வரும் 10ம் தேதி முதல் 1.15 கோடி பேருக்கு ஆயிரம் ரூபாய் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்பது குறிப்பிடதக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“