/indian-express-tamil/media/media_files/aDTPZvKQ0GQosuVJtu2B.jpg)
கவிஞர் இனியவன் விவகாரத்தில் தமிழ்நாடு டிஜிபிக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை பெருங்குடியில் தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக பேச்சாளர் கவிஞர் இனியவன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து தரக்குறைவாகவும், ஆட்சேபத்துக்குரிய வகையிலும் விமர்சித்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அவரின் பேச்சு சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில், இனியவன் பேச்சுக்கு தமிழ்நாடு தேசிய மகளி்ர் ஆணையம் தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னதாக கவிஞர் இனியவன் பேச்சுக்கு எதிராக பா.ஜனதவினர் புகார் அளித்திருந்தனர். அந்தப் பொதுக்கூட்ட மேடையில் பேசிய இனியவன், “நிர்மலா சீதாராமன் எந்தத் தேர்தலிலும் நிற்பதில்லை. மாறாக அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டு தமிழ்நாடு எம்.பி.க்களிடத்தில் கேள்வியெழுப்பிவருகிறார் எனக்கூறியுள்ளார். மேலும் சில மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டினார் எனவும் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.