/indian-express-tamil/media/media_files/2025/06/21/yoga-training-2025-06-21-08-44-11.jpg)
சர்வதேச யோகா தினம்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி!
சர்வதேச யோகா தினம் இன்று (ஜூன் 21) கொண்டாடப்படுவதையொட்டி நேற்று (ஜூன் 20), மதுரை திருப்பரங்குன்றம் அடுத்த திருநகர் முத்து தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு யோகா மற்றும் தியான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. யோகாசனத்தின் நன்மைகள் குறித்தும் உடற்பயிற்சிகளை எவ்வாறு செய்வது என்பது குறித்தும் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
திருநகர் அண்ணா பூங்கா விளையாட்டு மைதானத்தில் ”போரில்லா உலகை முன்னிலைப்படுத்துவோம்” என்பதை கருத்தில் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆயிரத்து 250 மாணவர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்தனர்.
இந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் பி.ஆனந்த் தலைமையில் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் இணைந்து ஏற்பாடுகளை செய்து இருந்தனர். பள்ளித் தலைவர் கே. சரவணன், பள்ளிச்செயலாளர் ஆர். கண்ணன், பள்ளி இயக்குனர் முனைவர் ப.நடன குருநாதன் வழிநடத்துதலில் இவ்விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.