லீவு முடிந்து கணவர் வேலைக்கு சென்றதால் புதுப்பெண் தற்கொலை - தலை தீபாவளியில் சோகம்

தான் சொன்னதை கேட்காமல் கணவர் வேலைக்கு சென்றதால் மனமுடைந்த ரூபிகா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தான் சொன்னதை கேட்காமல் கணவர் வேலைக்கு சென்றதால் மனமுடைந்த ரூபிகா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
rubika

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே உள்ள குன்னத்தூர், களத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி மச்சக்காளையின் இரண்டாவது மகள் ரூபிகா (21). இவருக்கும், திண்டுக்கல் மாவட்டம் சிறுகுடி அருகே உள்ள ரெட்டையம்பட்டி கிராமத்தை சேர்ந்த பாண்டி என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. பாண்டி தற்போது திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

Advertisment

புதுமண தம்பதியான பாண்டி–ரூபிகா தம்பதிகள் கடந்த 19-ஆம் தேதி தலை தீபாவளியை குடும்பத்தினர், உறவினர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடினர். இதையடுத்து நேற்று பாண்டி, வேலைக்காக திருச்சிக்கு செல்ல வேண்டும் என கூறியதாக தெரியவந்துள்ளது. இதற்கு ரூபிகா எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையில் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் பாண்டி வேலைக்கு சென்றுள்ளார்.

தான் சொன்னதை கணவர் கேட்காமல்  வேலைக்கு சென்றுவிட்டதால் மனமுடைந்த ரூபிகா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து புழுதிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிவகங்கை சப்-கலெக்டர் ஆயுஷ் வெங்கட்வட்ஸ் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை ஆய்வு செய்தார்.

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: