New Update
/indian-express-tamil/media/media_files/rVLaxahsw7X9TtcOGZdE.jpg)
அபாயகரமான ஆயுதங்களை கையில் வைத்துக் கொண்டு ரீல்ஸ் செய்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளைஞரை திருச்சி மாவட்ட எஸ்.பி தலைமையிலான சிறப்பு குழு கைது செய்தது.
திருச்சி மாவட்டம் எட்டரை கிராமத்தை சேர்ந்த முகேஷ் என்கிற இளைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபாயகரமான ஆயுதங்களை கையில் வைத்துக் கொண்டு ரீல்ஸ் செய்து அதனை பதிவிட்டு வந்தார்.
இந்த சூழலில், நேற்று காலை (டிச.15) எட்டரை கிராமத்தில் உள்ள கடை வீதியில் கையில் அரிவாளுடன் முகேஷ் நின்று கொண்டிருப்பதாகவும், தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் முகேஷ் அரிவாளுடன் சுற்றி திரிவதாகவும் திருச்சி மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் தனிப்படை போலீசார் விரைந்து சென்று பார்த்த போது முகேஷ் அங்கிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல் துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுபோன்ற அபாயகரமான ஆயுதங்களுடன் கூடிய புகைப்படங்கள் அல்லது வீடியோ வீடியோவை பதிவிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாவட்ட காவல் துறையின் சமூக வலைதளங்கள் கண்காணிப்பு குழு எப்போதும் இது போன்ற அபாயகரமான பதிவுகளை பதிவிடும் நபர்களை கண்காணிப்பார்கள் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.