/indian-express-tamil/media/media_files/T6zdgz94b53ErhoCRwk6.jpg)
கொடுவிலார்பட்டி கம்மவார் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
தேனி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள, கொடுவிலார்பட்டி கம்மவார் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில், 39 மக்களவைத் தொகுதிகளில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், தேனி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள, கொடுவிலார்பட்டி கம்மவார் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
தேனி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர் மற்றும் கம்பம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் கல்லூரி கல்வி வளாகத்தில் அமைந்துள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தடை செய்யப்பட்ட பகுதியாக உள்ள தேனி கம்மவார் சங்கம் கல்லூரி வளாகத்திற்குள் திங்கள்கிழமை (ஏப்ரல் 29) இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் அத்துமீறி நுழைய முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். இதனால், போலீசாருக்கும் அந்த இளைஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, அந்த இளைஞரிடம் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் சின்னமனூர் அருகே உள்ள சீப்பாலக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (27) என்பது தெரியவந்தது. இவர், கம்மவார் கல்லூரியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பணிபுரிந்தவர் என்பதும் தெரியவந்தது.
கம்மவார் கல்லூரி கல்வி வளாகத்தில் அமைந்துள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக, ராஜேஷ் கண்ணன் மீது கொடுவிலார்பட்டி வி.ஏ.ஓ மதுக்கண்ணன் கொடுத்த புகார் அளித்தார்.
இந்த புகாரின் -பேரில் 448, 188, 294(b), 353, 506 (II) ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள பழனிசெட்டிபட்டி போலீசார், ராஜேஷ் கண்ணனை கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.