ஆயுத பூஜைக்கு லாரியை கழுவ சென்ற இளைஞர் : ஏரியில் மாயம்

லாரியை கழுவ சென்று ஏரியில் மூழ்கிய இளைஞரை 8 மணி நேரமாக தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.

லாரியை கழுவ சென்று ஏரியில் மூழ்கிய இளைஞரை 8 மணி நேரமாக தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
youth missing

குன்றத்தூர் அருகே ஆயுத பூஜைக்காக லாரியை கழுவ ஏரிக்கு சென்ற இளைஞர் நீரில் மாயமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

Advertisment

சென்னையை அடுத்த குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள புதுநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மகன் கார்த்தி (30). லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வந்த இவர், ஆயுத பூஜையை முன்னிட்டு தான் ஓட்டும் லாரியை கழுவ முயன்றுள்ளார். 

இதற்காக புதுப்பேடு கிராமத்தில் உள்ள ஏரியில் இவர் லாரியை ஓட்டி சென்று அங்கு கழுவியுள்ளார். அப்போது ஏரியில் குளித்த அவர் தண்ணீரில் மூழ்கியதாக தெரிகிறது. இது தொடர்பாக சோமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் திருபெரும்புதூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்து வர வைத்தனர். அதன்படி இன்று காலை 11 மணியிலிருந்து தண்ணீரில் கார்த்தியை தீயணைப்புத் துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். ஆனால் கார்த்தி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 

Advertisment
Advertisements

இதனால் அவரது தாய் தந்தை மற்றும் உறவினர்கள் கண்ணீர் சிந்திய படி ஏரிக்கரையில் காத்திருக்கின்றனர். மேலும், எப்படியாவது தங்கள் மகனை கண்டுபிடித்து தர வேண்டுமென அவர்கள் கண்ணீருடன் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: