/tamil-ie/media/media_files/uploads/2022/09/cell-phone-snatching.jpg)
கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே கல்லூரி மாணவியிடம் செல்போன் பறித்துக்கொண்டு ஓடிய வட மாநில இளைஞரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் நின்று செல்போன் பேசிய கொண்டிருந்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/09/IMG_20220902_181359.jpg)
அப்போது அங்கு வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் செல்போன் பேசிக்கொண்டிருந்த பெண்ணிடமிருந்து செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.
இதனையடுத்து, அந்த பெண் கூச்சலிட்டபடி அந்த நபரை துரத்தி சென்றார். இதைப் பார்த்த அங்கு இருந்த பொதுமககள் அந்த நபரை துரத்தி சென்றனர். சிறிது தூரத்தில் அந்த வாலிபரை மடக்கி பிடித்த பொதுமக்கள் காட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/09/IMG_20220902_181321.jpg)
மேலும், அந்த வாலிபர் மீது வேறு ஏதும் குற்ற சம்பவ வழக்குகள் உள்ளதா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் செல்போன் பறிப்பு சம்பவத்தால் அப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.