Advertisment

குழந்தையின் பாலினத்தை வெளியிட்ட யூடியூபர் இர்பான்: சுகாதாரத் துறை நடவடிக்கை

பிரபல யூடியூபர் இர்பான் தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்த நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக சுகாதாரத் துறை பரிந்துரை.

author-image
WebDesk
New Update
YT Irfan.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

வெளிநாட்டில் பரிசோதனை செய்து, தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த யூடியூபர் இர்பான் மீது நடவடிக்கை எடுக்க தமிழக சுகாதாரத் துறை பரிந்துரை செய்துள்ளது. தமிழில் உணவு ரிவ்யூ செய்யும் பிரபல யூடியூபராக உள்ளவர் இர்பான். இவரை ஏராளமானவர்கள் யூடியூப், இன்ஸ்டாகிராம் தளத்தில் பின்தொடர்ந்து வருகின்றனர். இவர் மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார். இவர்கள் சமீபத்தில் வெளிநாடு சுற்றுலா சென்றிருந்தனர். 

Advertisment

அப்போது, அங்கு பரிசோதனை செய்து  தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்திருந்தார். இதை வீடியோ பதிவு செய்து யூடியூப்பில் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவை இதுவரை சுமார் 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர். எனினும் இந்தியாவில் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை அறிவது சட்டப்படி குற்றமாகும். 

இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை இர்பான் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இர்பானுக்கு விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment