ஊடகப் பணியில் இருந்து விலகுவதாக சவுக்கு சங்கர் அறிவிப்பு: 'தாயின் உயிரை பணயம் வைக்க விரும்பவில்லை'

தாயின் உயிரை பணயம் வைத்து ஊடகம் நடத்த விரும்பவில்லை; ஊடகப் பணியில் இருந்து விலகுவதாக சவுக்கு சங்கர் வீடியோ வெளியீடு

தாயின் உயிரை பணயம் வைத்து ஊடகம் நடத்த விரும்பவில்லை; ஊடகப் பணியில் இருந்து விலகுவதாக சவுக்கு சங்கர் வீடியோ வெளியீடு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
savukku

தன் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், ஊடகப் பணியில் இருந்து விலகுவதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் அறிவித்துள்ளார்.

Advertisment

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் வசித்து வருகிறார். இவர் சவுக்கு மீடியா என்ற பெயரில் யூடியூபில் அரசியல் விமர்சன வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்தநிலையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சவுக்கு சங்கர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், இவருக்கு எதிராக சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனால் சவுக்கு சங்கரை போலீசார் சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து, ஜாமின் பெற்று சவுக்கு சங்கர் வெளியே வந்தார். எனினும், தொடர்ச்சியாக யூடியூபில் சவுக்கு சங்கர் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில், தூய்மைப் பணியாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி சவுக்கு சங்கர் வீட்டின் மீது இன்று (மார்ச் 24) காலை தாக்குதல் நடத்தப்பட்டது. இது குறித்த தகவலை சவுக்கு சங்கர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "இன்று காலை 9.30 மணி முதல், துப்புறவு தொழிலாளிகள் என்று கூறிக் கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் நானும் என் தாயாரும் குடியிருக்கும் வீட்டின் மீது சராமரியாக தாக்குதல் நடத்தி வருகிறது. நான் வெளியே கிளம்பிய 5 நிமிடத்தில் வந்த இந்த கும்பல், வீட்டின் கதவை உடைத்து, உள்ளே நுழைந்து, படுக்கையறை, சமையலறை, சமையல் பொருட்கள் என அத்தனை பொருட்களின் மீதும் சாக்கடையையும், மலத்தையும் கொட்டினர். என்ன நடந்தது என்று என் தாயாருக்கு போன் செய்தபோது அந்த போனை வாங்கி வீடியோ காலில் வந்து கொலை மிரட்டல் விடுத்தனர்.  

Advertisment
Advertisements

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தேன். ஒரே ஒரு உதவி ஆய்வாளரும், ஒரு காவலரும் மட்டும் வந்தனர். 9.30 மணி முதல் இதுவரை போராட்டம் நடத்தியவர்கள், அந்த இடத்தை விட்டு அகலவில்லை. அந்த இடத்திற்கு சென்ற ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். யாருடைய தூண்டுதலில் இந்தத் தாக்குதல் நடைபெறுகிறது என்பதை சொல்ல வேண்டியதில்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர, போராட்டக்காரர்கள் வீட்டின் கதவை உடைத்து அவரது வீட்டிற்குள் நுழைவதாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி என்று சிலவற்றை, தனது எக்ஸ் தள பக்கத்தில் சவுக்கு சங்கர் பதிவிட்டுள்ளார். 

பின்னர் தனது வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களையும் சவுக்கு சங்கர் பகிர்ந்து கொண்டார். "போராட்டக்காரர்கள் மினி பஸ்ஸில் வந்திருந்தனர். முதலில் என் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, பாதுகாப்பாக இருக்குமாறு என் தாயாரிடம் தொலைபேசியில் அழைத்து கூறினேன். சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தேன். அதற்குள் வீட்டின் பின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். என் தாயாரின் செல்போனை பறித்து, அதில் வீடியோ கால் மூலம் எனக்கு மிரட்டல் விடுத்தனர்.

அதன் பின்னர், என் தாயார் பாதுகாப்பாக இருப்பதாகவும், செல்போனை வாங்கி மீண்டும் என் தாயாரிடம் ஒப்படைத்ததாகவும் போலீசார் என்னிடம் கூறினர். தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட வாகனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் அருண் ஆகியோர் மீது நான் குற்றச்சாட்டுகளை முன்வைத்தேன். இந்த தூண்டுதலின் பேரில் என் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டது" என்று சவுக்கு சங்கர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில், ஊடகப் பணியில் இருந்து விலகுவதாக சவுக்கு சங்கர் வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் தாயின் உயிரை பணயம் வைத்து ஊடகம் நடத்த விரும்பவில்லை என்றும் சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.

ரொம்ப யோசித்து, வேறு வழியில்லாமல் இந்த முடிவை எடுக்கிறேன். அலுவலகத்தை காலி செய்ய சொல்லிவிட்டார்கள். வேறு எங்கும் வாடகைக்கு அலுவலகம் தரமாட்டார்கள். இன்று நடந்த தாக்குதல் ஊடகப் பணி போதும் என்ற முடிவை நோக்கி தள்ளிவிட்டது. இந்த ஊடகம் நடத்தி, சில விஷயங்களை மக்களிடம் அம்பலபடுத்தி, நாம் செய்யும் பணி, இந்த அரசின் குறைகளை சுட்டிக்காட்டி, இந்த அரசு சரியாக நடக்க வேண்டும் என்பதற்காகத் தான். ஆனால் இன்று நடந்த தாக்குதல், எனக்கு மட்டுமல்லாமல், என்னை சுற்றியுள்ளவர்களின் உயிருக்கும் ஆபத்து எனும்போது நான் இந்த முடிவை எடுக்கிறேன். இன்று நடந்த தாக்குதலுக்கு இன்றைய ஆட்சியாளர்கள் தான் பொறுப்பு என்று சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.

Savukku Shankar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: