கோவை கல்லூரியில் யுவன் இசை நிகழ்ச்சி: முண்டித் தள்ளிய மாணவ, மாணவிகள்; பலர் காயம்
கோவை துடியலூர் தனியார் கல்லூரியில் நடைபெற்ற யுவன்சங்கர் ராஜா இசை நிகழ்ச்சியைக் காண ஏராளமான மாணவர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி மாணவர்கள், போலீசார் காயமடைந்தனர்.
கோவை துடியலூர் தனியார் கல்லூரியில் நடைபெற்ற யுவன்சங்கர் ராஜா இசை நிகழ்ச்சியைக் காண ஏராளமான மாணவர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி மாணவர்கள், போலீசார் காயமடைந்தனர்.
கோவை சரவணம்பட்டி - துடியலூர் சாலையில் உள்ள எஸ்.என்.எஸ் ராஜலட்சுமி தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 25-வது ஆண்டுவிழா நேற்று (அக்டோபர் 8) நடைபெற்றது. இதையொட்டி கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி மற்றும் பிளாக் ஷீப் யூட்யூப் சேனல் குழுவினரின் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
Advertisment
இதையொட்டி நிகழ்ச்சியைக் காண பல்வேறு கல்லூரி மாணவர்கள், அந்த கல்லூரியைச் சேர்ந்தவர்கள் என 5000க்கும் மேற்பட்டவர்கள் கல்லூரி முன் குவிந்தனர். இந்தநிலையில் நிகழ்ச்சியைக் காண முன்பு வந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாகவும், மதியம் 12 மணிக்கு மேல் வந்தவர்கள் அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. கல்லூரி நிர்வாகத்திடம் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் யுவன் சங்கர் கார் வந்ததும், நுழைவு வாயிலில் நின்றிருந்த மாணவர்கள் முண்டி அடித்து உள்ளே செல்ல முயன்றனர். அப்போது கூட்டநெரிசலில் சிக்கி 3 மாணவிகள் கீழே விழுந்தனர். இதில் ஒருவருக்கு முகம், கை பகுதிகளில் காயம் ஏற்பட்டது. மற்றொரு மாணவிக்கு வலது தோள்பட்டையிலும் இடது கண் அருகே காயம் ஏற்பட்டது. மற்றொருவருக்கு இடது தோள்பட்டை, இடது மணிக்கட்டுக்கு கீழே காயம் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உடனடியாக மாணவிகளை மீட்டு மருத்துவமனையில் சிகிக்சைக்கு அனுமதித்தனர்.
Advertisment
Advertisements
மேலும், இந்த தள்ளுமுள்ளின் போது, சரவணம்பட்டி பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் பிலோமினாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. நுழைவாயிலில் பாதுகாப்பு ஈடுபட்டிருந்த போது ஏற்பட்டது. உடனடியாக அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கூட்ட நெரிசலில் மேலும் சிலருக்கு காயம், மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அனைவரையும் காவல்துறையினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது. தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சி, பிளாக் ஷீப் குழுவினரின் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கோவையில் பெரும்பாலான தனியார் கல்லூரிகள் சினிமா நட்சத்திரங்களை கல்லூரி விழாவிற்கு அழைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் மாணவர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். இவ்வாறு இருக்கும்போது சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் போதிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும், காவல்துறையினரும் இதை உறுதிப்படுத்தி அனுமதி அளிக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news