20 லட்சம் ரூபாய் வாடகை தராமல் மோசடி செய்துவிட்டதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில், ஜமீலா என்பவருக்குச் சொந்தமான வீட்டில் யுவன் சங்கர் ராஜா வாடைகைக்கு குடியிருந்து வந்தார். இந்நிலையில் ஜமீலாவின் சகோதரர் முகமது ஜாவித் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில் 20 லட்சம் ரூபாய் வாடைகை பாக்கியை வழங்காமல் யுவன் சங்கர் ராஜா இழுத்தடித்து வந்ததாகவும், போனில் தொடர்பு கொண்டாலும் பதில் அளைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எந்த தகவலும் கொடுக்காமல் வீட்டை காலி செய்துவிட்டு சென்றதாகவும், அருகில் இருப்பவர்கள் மூலம்தான் இந்த தகவலை தெரிந்துகொண்டதாக்கவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வாடகை பாக்கிய்யை வழங்க வேண்டும் என்றும் சேதத்துக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"